பெங்களூரு ஹோட்டலில் காங்கிரஸ் எம்எல்ஏ ஆனந்த் சிங் இருப்பதாக அக்கட்சியினர் புகார் கூறினர்.
தற்காலிக சபாநாயகர் போப்பையா தலைமையில் சட்டப்பேரவை கூடியது:
காலை 11 மணியளவில், தற்காலிக சபாநாயகர் போப்பையா தலைமையில் சட்டப்பேரவை கூடியது. முதலமைச்சர் எடியூரப்பா, முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா உள்ளிட்டோர் எம்எல்ஏ.க்களாக பதவியேற்றுக்கொண்டனர்.
தற்காலிக சபாநாயகர் போப்பையா, எம்எல்ஏ.க்களுக்கு வரிசையாக பதவிப் பிரமாணம் செய்து வைத்து வருகிறார். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏ.க்கள் ஆனந்த் சிங், பிரதாப் கவுடா பாட்டீல் ஆகிய இருவரும் இதுவரை கர்நாடக சட்டப்பேரவைக்கு வரவில்லை. எம்எல்ஏ.க்கள் பதவியேற்பு நிகழ்ச்சி முடிந்த பிறகு மாலை 4 மணியளவில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.
புதிதாக தேர்வு செய்யப்பட்ட எம்எல்ஏ.க்கள்,கர்நாடக சட்டப்பேரவையில் பதவியேற்றனர். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 2 எம்எல்ஏ.க்கள் இதுவரை அவைக்கு வரவில்லை.
மாயமான காங். எம்எல்ஏக்கள் ஆனந்த் சிங், பிரதாப் கவுடா கோல்ட்:
இந்நிலையில் மாயமான காங். எம்எல்ஏக்கள் ஆனந்த் சிங், பிரதாப் கவுடா கோல்ட் பின்ச் ஓட்டலில் தங்கி இருப்பதாக கிடைத்த தகவலின்பேரில், காவல்துறை ஓட்டலுக்கு விரைந்தனர் .
பெங்களூரு ஹோட்டலில் காங்கிரஸ் எம்எல்ஏ ஆனந்த் சிங்:
பெங்களூரு ஹோட்டலில் காங்கிரஸ் எம்எல்ஏ ஆனந்த் சிங் இருப்பதாக அக்கட்சியினர் புகார் கூறினர். அவரை பாஜகவினர் அடைத்து வைத்திருப்பதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர். இதையடுத்து அந்த ஹோட்டலைச் சுற்றி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. அங்கு எம்எல்ஏ இருக்கிறாரா? என காவல்துறை டிஜிபி சோதனை நடத்தினார். இந்த பரபரப்புக்கு இடையே எம்எல்ஏ ஆனந்த் சிங் அந்த ஹோட்டலில் இருந்து காரில் புறப்பட்டு வெளியே சென்றார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
Manipur Violence : மணிப்பூரில் ஒரு கும்பலால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட இரு பெண்கள் குறித்தும், அங்கு நேர்ந்த சம்பவங்கள் குறித்தும் CBI அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த…
Covishield: கோவிஷீல்டு தடுப்பூசியால் அரிதாகவே பக்க விளைவுகள் ஏற்படலாம் என அஸ்ட்ராஜெனெகா நிறுவனம் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது. முதன் முதலில் சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் பின்னர்…
Rohit Sharma : ரோஹித் சர்மா கிரிக்கெட்டிற்குள் நுழைந்த போது அவரிடம் பேசிய விஷயங்களை பற்றி கவுதம் கம்பீர் நினைவு கூர்ந்தார். இந்திய அணியின் கிரிக்கெட் கேப்டன்…
BCCI : டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது பிசிசிஐ. ஐபிஎல் 2024 தொடர் நடைபெற்று வரும் நிலையில் நடைபெற இருக்கும் டி20 உலகக்கோப்பை…
T20 World Cup 2024: டி20 உலக கோப்பை தொடருக்காக எய்டன் மார்க்ரம் தலைமையில் 15 பேர் கொண்ட தென்னாப்பிரிக்கா அணி அறிவிப்பு. ஐசிசியின் டி20 உலகக்கோப்பை…
Winner : தெலுங்கு சினிமாவை பழி வாங்க வின்னர் படத்தை காப்பி அடித்து எடுத்தேன் என சுந்தர் சி தெரிவித்துள்ளார். இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் நடிகர்…