Breaking:”நீட் விலக்கு மசோதா ,ஆளுநருக்கு அனுப்பப்பட்டது-அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்”..!

நேற்று பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதா ,ஆளுநருக்கு அனுப்பப்பட்டது என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் நீட் தேர்வுக்கு விலக்கு கோரி முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கொண்டுவந்த மசோதா நேற்று நிறைவேற்றப்பட்டது. அதிமுக உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன், குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேற்றப்பட்டது. நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் மசோதாவை அதிமுக ஆதரிப்பதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேரவையில் தெரிவித்தார்.

மேலும், நீட் விலக்கு மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பேரவையில் இருந்து பாஜக வெளிநடப்பு செய்துள்ளது. நீட் தேர்வால் பல நன்மைகள் உண்டு,மேலும்,கூட்டணி கட்சியின் முடிவு வேறு எங்களின் முடிவு வேறு என்று பாஜகவின் நயினார் நாகேந்திரன் பேசியதையடுத்து,பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

இந்நிலையில்,தமிழக சட்டப்பேரவையில் நேற்று நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதா ஆளுநருக்கு அனுப்பட்டதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

மேலும்,இது தொடர்பாக அவர் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:

தமிழக சட்டப்பேரவையில் நேற்று நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதா ஆளுநருக்கு அனுப்பப்பட்டது.மேலும்,குடியரசுத் தலைவருக்கும் அனுப்பப்படும்.நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற தொடர்ந்து முயற்சி மேற்கொள்ளப்படும்”,என்று தெரிவித்துள்ளார்.