#Breaking : மு.க.ஸ்டாலின் அரசியல் ஆதாயம் தேடுகிறார்! முதல்வர் பழனிசாமி குற்றசாட்டு!

மு.க.ஸ்டாலின் உள்ஒதுக்கீடு விவகாரத்தில், அரசியல் ஆதாயம் தேடுவதாக முதல்வர் குற்றசாட்டு.

மருத்துவ நுழைவு தேர்வு அறிமுகப்படுத்துவதற்கு முன்பதாக, அரசு பள்ளியில் படித்த மாணவர்கள், அதிகமானோர் மருத்துவ கல்லூரியில் சேர்ந்தனர். ஆனால், தற்போது அரசு பள்ளியில் படித்த மாணவர்கள், மருத்துவ கல்லூரியில் பயில்வது என்பது, அரசுப்பள்ளி மாணவர்களுக்கு எட்டாக்கனியாக உள்ளது.

இந்நிலையில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் இட ஒதுக்கீட்டை  வழங்கவேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது. தமிழக சட்டப்பேரவையில், இதற்கான மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில், இதற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் தாமதித்து வருகிறார்.

இதற்கு எதிராக, திமுக தலைவர் ஸ்டாலின் உட்பட பல அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இதனையடுத்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், மு.க.ஸ்டாலின் உள்ஒதுக்கீடு விவகாரத்தில், அரசியல் ஆதாயம் தேடுவதாக குற்றசாட்டியுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.