வீடு வீடாக சென்று நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் 87 வயது மருத்துவர்!

வீடு வீடாக சென்று நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் 87 வயது மருத்துவர்.

இன்று மருத்துவம் என்பதும், பணத்தை அல்லி இறைத்தால் தான் கிடைக்கும் என்ற சூழல் சில இடங்களில் உள்ளது. பல ஏழை சிகிச்சை பெற முடியாமல், தங்கள் ஆயுசு நாட்களை நோயோடு கழித்து வருகின்றனர். மேலும், சிலர் மிக சிறிய வயதிலும் இறந்து விடுகின்றனர்.

இந்நிலையில், மஹாராஷ்டிரா மாநிலத்தில், ராமசந்திர தண்டகர் என்ற 87 வயதான மருத்துவர் ஒருவர், பல்லார்ஷா, முல், பாம்பர்னா வட்டங்களை சேர்ந்த 10 கிராமங்களுக்கு, இந்த வயதான மருத்துவர், சைக்கிளிலேயே சென்று இலவச மருத்துவ சேவை செய்து வருகிறார்.

இவர், 1958 முதல், 60 ஆண்டுகளுக்கும் மேலாக, தினமும் ஒவ்வொரு வீடாக சென்று நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகிறார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.