#BREAKING: மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்த பழ கருப்பையா..!

கமல்ஹாசன் முன்னிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியில் பழ கருப்பையா இணைந்தார்.

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த கமலஹாசன், இன்னும் நிறையே நாட்கள் என்று நம்பிக்கொண்டு இருந்தவர்களுக்கு அது இல்லை என்று அறிமுகமாகியுள்ளது. இன்னும் 36 நாட்கள் மட்டுமே உள்ளது. நாங்கள் நல்ல வேளையாக ஆயத்தமாக இருந்ததால் அடுத்த கட்டத்தை வேலைகளால் இறங்கியுள்ளோம்.

இங்கு முக்கியமாக நாங்கள் இரு நபர்களை அறிமுக படுத்த வேண்டியிருக்கிறது இந்த செய்தியாளர்களை சந்திப்பு என்பது நாங்கள் எந்த அளவுக்கு தயாரக இருக்கிறோம் என்பதே தெரியபடுத்துவதே வந்துள்ளோம் என்றார். மூத்த அரசியல்வாதியான பழ.கருப்பையா மக்கள் நீதி மையத்தில் இணைகிறார். மேலும், மக்கள் நீதி மய்யம் சார்பாக வருகிற சட்டமன்ற தேர்தலிலும் போட்டியிடுகிறரர் என தெரிவித்தார்.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர் நேர்காணல் நாளை மறுநாள் நடைபெறும். மக்கள் நீதி மய்யம் கட்சியில் போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் மார்ச் 7-ம் தேதி வெளியிடப்படும் என கூறினார்.

 

author avatar
murugan