#Breaking : உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக ஈபிஎஸ் தொடர்ந்த வழக்கு..! நாளை மறுநாள் விசாரணை..! – உச்சநீதிமன்றம்

எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்த மேல்முறையீடு வழக்கு உச்சநீதிமன்றத்தில் ஜூலை 6-ல் விசாரணை செய்யும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.

அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்னை விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன், சென்னை உயர்நீதிமன்றம், அதிமுக பொதுக்குழுவில் 23 தீர்மானங்களை தவிர வேறு எந்த தீர்மானத்தையும் நிறைவேற்ற கூடாது என உத்தரவிட்டிருந்தது. அதிமுக பொதுகுழு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் பழனிச்சாமி மேல்முறையீடு செய்துள்ளார்.

இந்த நிலையில், எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்த மேல்முறையீடு வழக்கு உச்சநீதிமன்றத்தில் ஜூலை 6-ல் விசாரணை செய்யும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. அதன்படி, தலைமை நீதிபதி அனுமதி பெற்று நாளை மறுநாள் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக இந்திரா பானர்ஜி அமர்வு அறிவித்துள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment