“அடுத்த இலக்கு…தமிழகத்தில் பாஜகவின் ஆட்சி”- உள்துறை அமைச்சர் அமித்ஷா அதிரடி!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் கடந்த 2 நாட்களாக நடைபெற்ற நிலையில்,பிரதமர் மோடி,மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா,பாஜகவின் தேசிய தலைவர் ஜேபி நட்டா,மற்றும் மத்திய அமைச்சர்கள்,பாஜக நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்நிலையில்,தமிழகத்தில் விரைவில் பாஜக ஆட்சிக்கு ஆட்சியமைக்கும் எனவும்,அதைப்போல தென்னிந்திய மாநிலங்களான கேரளா,ஆந்திரா, ஒடிசா ஆகிய பிற தென்னிந்திய மாநிலங்களிலும் பாஜகவின் ஆட்சி விரைவில் மலரும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக,தேசிய செயற்குழு கூட்டத்தில் பேசிய அமித்ஷா: “இந்தியாவானது பல ஆண்டுகளாக துன்பங்களை அனுபவித்ததற்கு வாரிசு அரசியல்,சாதி அரசியல்,திருப்திப்படுத்தும் அரசியல் போன்றவையே காரணமாக அமைந்தது”,என்று கூறினார்.

இதனைத் தொடர்ந்து,பேசிய அவர்:”இந்தியாவில் அடுத்த 30 முதல் 40 ஆண்டுகள் பாஜகவின் காலமாக இருக்கும்.அந்த வகையில், தென்னிந்தியாதான் பாஜகவின் அடுத்தக்கட்ட இலக்கு.குறிப்பாக, தமிழகம்,ஆந்திரா,கேரளா,ஒடிசா போன்ற மாநிலங்களில் பாஜக விரைவில் ஆட்சிக்கு ஆட்சி அமைக்கும்.மேலும்,தெலுங்கனா,மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் குடும்ப அரசியலை பாஜக முடிவுக்கு கொண்டு வரும்”,என்று கூறினார்.

Leave a Comment