#BREAKING: தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 26,533 பேருக்கு கொரோனா உறுதி!

தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 26,533 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், மொத்தம் எண்ணிக்கை 32,79,284 -ஆக உயர்வு.

தமிழ்நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 26,533 பேருக்கு கொரோனா உறுதி செய்யபட்டுள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. நேற்றைய பாதிப்பு 28,515-ஆக இருந்த நிலையில், இன்று 26,533-ஆக குறைந்து காணப்படுகிறது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மொத்த எண்ணிக்கை 32,79,284 -ஆக அதிகரித்துள்ளது.

இன்று ஒரேநாளில் கொரோனாவுக்கு 48 பேர் உயிரிழந்த நிலையில், இதுவரை மொத்த பலியானோர் எண்ணிக்கை  37,460 -ஆக உள்ளது. இதுபோன்று இன்று மட்டும் 28,156 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை கொரோனா பாதித்த 32,79,284 பேரில் 30,29,961பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும், தற்போது சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 2,11,863 ஆக உள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் சென்னை – 5,246, கோயம்புத்தூர் – 3,448, திருப்பூர் – 1779, செங்கல்பட்டு – 1,662, சேலம் – 1,387, ஈரோடு – 1,261 ஆகிய மாவட்டங்களில் அதிகபட்சமாக கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்