திமுக, காங் இரண்டும் இந்து விரோதியே – எச்.ராஜா

ராகுல் ஆ.ராசா இந்துக்கள் அனைவரும் விபச்சாரி மகன் என்று சொல்லியும் மௌனம் காப்பது ஏன்? என எச்.ராஜா ட்வீட். 

கடந்த சில நாட்களுக்கு முன்னதாக திமுக எம்.பியும், துணை பொதுச்செயலாளருமான ஆ.ராசா இந்துக்கள் மற்றும் சூத்திரர்கள் தொடர்பாக மனு தர்மத்தைச் சுட்டிக்காட்டிப் பேசி இருந்தார். இவரது பேச்சு தற்போது சர்ச்சையாகியுள்ள நிலையில், இதுதொடர்பாக பாஜகவினர் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

மேலும், ஆ.ராசாவை கண்டித்து போராட்டம் நடைபெற உள்ளதா பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். இந்த நிலையில், பாஜக மூத்த தலைவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘தேர்தல் வந்தால் வட மாநிலங்களில் கோட்டிற்கு மேல் பூணூல் போட்டுகொண்டு நான் ஜினோதாரி (பூணூல்) போட்ட கவுல் பிராமணர் என்று விளம்பரம் செய்து இந்துக்களை ஏமாற்றும் போலி ராகுல் ஆ.ராசா இந்துக்கள் அனைவரும் விபச்சாரி மகன் என்று சொல்லியும் மௌனம் காப்பது ஏன்? திமுக, காங் இரண்டும் இந்து விரோதியே.’ என பதிவிட்டுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment