மதுமிதா என்ன பேசினார்? எதற்காக வெளியேறினார்? நடந்தது என்ன?!

பிக் பாஸ் மூன்றாவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று போட்டியாளர் மதுமிதா திடீரென்று வெளியேறினார் அவர் நேற்று கமலுடன் மேடையில பேசுகையில் கையில் கட்டு போட்டு இருந்தார். இதனை பார்த்து  பார்வையாளர்கள், அவர் பிக்பாஸ் வீட்டினுள் தற்கொலை முயற்சி செய்து கொண்டாரா என இன்யையத்தளத்தில், கேட்டு வந்தனர்.

நேற்று ஒளிபரப்பான எபிசோடிலும் மதுமிதா பேசியவை ஒளிபரப்பாகவில்லை. அவர் பேசியது கட் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக மதுமிதாவின் நெருங்கிய நட்பு வட்டாரத்தில் உள்ள அரூனா என்பவர் தனது  பேஸ்புக் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அதில், பிக்பாஸ் வீட்டினுள் மதுமிதா எதார்த்தமாக காவிரி பிரச்சனையை பற்றி பேசியதாகவும் அதாவது வருணபகவான் தமிழ்நாட்டை சோதிக்கிறார் கர்நாடகாவுக்குமட்டும் மழை தருகிறார் என கூறியுள்ளார் எனவும்,

பிக்பாஸ் போட்டியில் உள்ள போட்டியாளர்களில் ஒருவரான ஷெரின் கர்நாடகத்தை சேர்ந்தவர், என்பதாலும் பிக்பாஸ் போட்டியாளர்கள் ஷேரினை குறிவைத்துதான் மதுமிதா பேசியுள்ளார் என எண்ணி மதுமிதாவை கிண்டல் செய்துள்ளனர் என்றும், அந்த பேச புக்  பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் பிக் பாஸில் என்ன நடந்தது என்று  ஒளிபரப்பாகாத வரை அனைத்தும் மர்மமாகவே உள்ளது. அவர் உண்மையிலேயே அரசியல் பேசினாரா இல்லை எதார்த்தமாக பேசினாரா என பார்வையாளர்களுக்கு இன்னும் சரிவர தெரியவில்லை.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.