எந்த விழாவிலும் பேனர்கள் வைக்க கூடாது-மு.க.ஸ்டாலின்

எந்த விழாவிலும் பேனர்கள் வைக்க கூடாது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலையில் விழா  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார்.அப்பொழுது அவர் பேசுகையில், பேனர் வைப்பது மக்களிடையே வெறுப்பை ஏற்படுத்துகிறது. எந்த விழாவிலும் பேனர்கள் வைக்க கூடாது.கருணாநிதி பிறந்த நாள் செம்மொழி நாள் விழாவாக கொண்டாடப்படும்.

தமிழகத்தில் முதலீடு செய்ய உள்ள வெளிநாட்டு நிறுவனங்களின் பெயர்களை முதலமைச்சர் அறிவிக்க வேண்டும்.திமுகவின் சாதனைகளை யாராலும் முறியடிக்க முடியாது.டைடல் பார்க் ஒன்றே போதும் திமுகவின் சாதனைக்கு .கருணாநிதியை பார்த்துதான் பொறாமைப்படுவோம், வேறு யாரையும் பார்த்து பொறாமைப்பட வேண்டிய அவசியம் இல்லை என்று தெரிவித்தார்.