கைது செய்யப்பட்ட பின் கெஜ்ரிவால் கூறிய வார்த்தைகள்…

Arvind Kejriwal: மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி முதலமைச்சரும், ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் நேற்று இரவு கைது செய்யப்பட்டார். முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைதை தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர்கள் கடும் கண்டங்களை தெரிவித்தனர்.

Read More – கெஜ்ரிவால் கைது..! வீட்டை சுற்றி 144 தடை.. டெல்லி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு!

அதுமட்டுமில்லாமல், பாஜகவுக்கு எதிராக ஆம் ஆத்மி கட்சியினர் போராட்டத்தில் குவித்துள்ளனர். இன்று நாடு தழுவிய போராட்டமும் அறிவிக்கப்பட்டது. இதனால், கெஜ்ரிவால் வீட்டை சுற்றி 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள உள்ள நிலையில் டெல்லி முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இதனிடையே, கைது நடவடிக்கைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், இன்று காலை டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியிருந்தது.

Read More – கெஜ்ரிவாலுக்கு மருத்துவ பரிசோதனை… இன்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு.!

இதனைத்தொடர்ந்து, டெல்லி ரூஸ் அவென்யூ நீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆஜர்படுத்தினர். அப்போது, அரவிந்த் கெஜ்ரிவாலை 10 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறை தரப்பில் நீதிமன்றத்தில் அனுமதி கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனிடையே, நீதிமன்றத்தில் ஆஜராகும்போது  மீடியாக்களை பார்த்து அரவிந்த் கெஜ்ரிவால் சில வார்த்தைகளை கூறினார். அவர் கூறியதாவது, சிறைக்குள் இருந்தாலும் சரி, வெளியில் இருந்தாலும் சரி, எனது வாழ்க்கை நாட்டுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

Read More – மீண்டும் அமைச்சராக பதவியேற்றார் பொன்முடி!

அதாவது, அமலாக்கத்துறை கைது நடவடிக்கைக்கு பிறகு முதல் முறையாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதுபோன்று, நான் சொல்ல வேண்டியதை நீதிமன்றத்தில் சொல்லிவிட்டேன் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சார்பில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் கூறினார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்