ஷங்கர் படத்துக்கு மியூசிக் பண்ண ரொம்ப கஷ்ட்டம்! என்ன ஏ.ஆர்.ரஹ்மான் இப்படி சொல்லீட்டிங்க?

A.R.Rahman : ஷங்கர் படத்திற்கு இசையமைப்பது கடினமான விஷயம் என ஏ.ஆர்.ரஹ்மான் கூறியுள்ளார்.

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மணிரத்தினம் இயக்குனர் ஷங்கர் ஆகியோருடைய கூட்டணியில் வெளிவந்த படங்களின் பாடல்கள் எப்படி இருக்கும் என்பதனை பற்றி சொல்லி தான் தெரிய வேண்டும் என்று இல்லை. இயக்குனரி மணிரத்தினம் மற்றும் இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் கூட்டணி இணைந்தாலே அந்த படத்தின் பாடல்கள் மிகப்பெரிய அளவில் வெற்றிபெற்று விடும்.

அதனை போலவே, ஷங்கருடன் ஏ.ஆர்.ரஹ்மான் கைகோர்க்கும் போதும் அந்த படத்தின் பாடல்கள் எல்லாம் பிரமாண்டமாக இருக்கும். இப்படியான சூழலில் இயக்குனர் மணிரத்னம் படத்திற்கு இசையமைப்பது கடினமா அல்லது ஷங்கர் படத்திற்கு இசையமைப்பது கடினமா என்ற கேள்வி சமீபத்திய பேட்டி ஒன்றில் ஏ.ஆர்.ரஹ்மானிடம் கேட்கப்பட்டுள்ளது.

அந்த கேள்விக்கு பதில் பதில் அளித்த ஏ.ஆர்.ரஹ்மான் ” சங்கர் சார் படத்திற்கு மியூசிக் பண்ணத்தான்ரொம்பவே கடினமாக இருக்கும். மணிரத்தினம்  படம் என்றால் இசையமைக்கும்போது ஒரு மாதிரி ஜாலியாக சென்று கொண்டு இருக்கும். ஆனால், ஷங்கர் சார் படத்திற்கு இசையமைக்கும்போது ஒரு அளவு வைத்து இருப்பார்.

இந்த அளவுக்கு தான் எனக்கு ஒரு பாட்டு வேண்டும் என்று எனக்கு கட்டளை போடுவார். அது நல்லது தான். நான் மட்டுமில்லை பாடல்களுக்கு வரி எழுதும் போது பாடலாசிரியர்களும் கஷ்டப்படுவார்கள். ஊர்வசி பாடல் எல்லாம் கிட்டத்தட்ட ஒரு 4 மாதங்களுக்கு மேல் எழுதப்பட்டது. தினமும் அமர்ந்து யோசித்து கொண்டு இருப்போம். சில பாடல்கள் சீக்கிரமாக வந்துவிடும்.  ஆனால், பல மெனக்கெடல் நடக்கும் இதெல்லாம் செய்து தான் ஷங்கர் பாடல் வெளியாகும்” எனவும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் கூறியுள்ளார்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.