தமிழக அரசை ரிமோட் மூலம் இயக்கி வருகிறது பா.ஜ.க அரசு…!சிலை திறப்பு விழாவில் ஆந்திர முதல்வர் கடும் தாக்கு …

ஸ்டாலின் 40 தொகுதிகளிலும் ஸ்டாலின் வெற்றி பெறுவார் என்று உறுதியாக நம்புகிறேன் என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் சிலை திறப்பு விழா நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க  காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி,காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, கேரளா, ஆந்திரா மற்றும் புதுச்சேரி முதலமைச்சர் வந்துள்ளனர்.

இந்நிலையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி,காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சென்னை வந்தடைந்த நிலையில் தற்போது சோனிய காந்தி சிலையை திறந்து வைத்தார்.
பின்னர் கருணாநிதி சிலை திறப்பு விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.இதில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறுகையில்,அனைவருக்கும் வணக்கம்”.தென் பாராதமே மிகவும் பெருமைப்படும் நாள் இது. இந்திய நாட்டின் மூத்த அரசியல்வாதி திருவுருவச் சிலை, சென்னை நகரத்தில் திறந்து வைத்துள்ளோம். இவ்விழாவில் பங்கு கொள்வதில் பெருமை கொள்கிறேன்.
தமிழ் அருமையான மொழி. தமிழ் கற்றுக் கொள்ள விரும்புகிறேன்.கலைஞரின் வாழ்வும் பணியும் தமிழக இளைஞருக்கு உந்து சக்தியாக இருக்கிறது.நாட்டின் மிக மூத்த அரசியல் தலைவர், 80 ஆண்டு கால அரசியலில் ஈடுபட்டவர் கலைஞர். 50 ஆண்டுகள் திமுக தலைவராக திகழ்ந்தவர். எந்த தேர்தலிலும் தோற்காதவர் கலைஞர்.
பா.ஜ.க அரசு அனைத்து அரசு அமைப்புகளையும் அழித்து வருகிறது. இங்கு யாரும் பா.ஜ.க ஆட்சியை விரும்பவில்லை. தமிழக அரசை ரிமோட் மூலம் இயக்கி வருகிறது பா.ஜ.க அரசு.தமிழகம், கேரளா, கர்நாடகா, கோவா மாநிலங்களில் ஆளுநர்கள் மூலம் பிரச்னையை எழுப்புகிறது பாஜக அரசு. பாஜக ஆட்சியில் யாராவது நன்மை அடைந்து உள்ளார்களா…..பணமதிப்பு நீக்கம் பொதுமக்களுக்கு பலன் தரவில்லை. ரஃபேல் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தவறான தகவலை தந்து சாதகமான தீர்ப்பை பெற்றுள்ளது. சிபிஐ, ஆர்பிஐ, அமலாக்கத்துறை போன்ற அமைப்புகளை மத்திய அரசு அழித்துவிட்டது.
தி.மு.க தலைவர் ஸ்டாலின் 40 தொகுதிகளிலும் ஸ்டாலின் வெற்றி பெறுவார் என்று உறுதியாக நம்புகிறேன். திமுகவை வெல்ல வைப்பதே கலைஞருக்கு செய்யும் நன்றி என்றும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
 
 

Leave a Comment