அகவிலைப்படியை வழங்க வேண்டும் – அண்ணாமலை

1.07.2022ல் வழங்கப்பட வேண்டிய அகவிலைப்படி உயர்வு அறிவிப்பை தமிழக அரசு வெளியிடவில்லை என அண்ணாமலை குற்றசாட்டு.

அரசு ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய அகவிலைப்படி உயர்வை தமிழக அரசு வழங்க வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 1.07.2022ல் வழங்கப்பட வேண்டிய அகவிலைப்படி உயர்வு அறிவிப்பை தமிழக அரசு வெளியிடவில்லை என்றும் கூறியுள்ளார். மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 4 சதவீதம் உயர்த்தப்பட்டு, ஏற்கெனவே இருந்த 34 சதவீதத்திலிருந்து 38 சதவீதமாக உயர்த்தி வழங்கப்பட்டது.

இதையடுத்து மற்ற மாநில அரசுகளும் ஒவ்வொன்றாக தங்களது ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை அறிவித்து வருகின்றன. ஆனால், தமிழ்நாட்டில் அதற்கான அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. இந்த நிலையில், அரசு ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய அகவிலைப்படி உயர்வை தமிழக அரசு வழங்க வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment