மூன்று மொழிகளில் எடுக்கப்படும் படத்திற்கும் ஒரே பெயர் வைங்க! விஜய்க்கு கோரிக்கை விடுத்த கங்கானா!

நடிகை கங்கானா ரனாவத் பிரபலமான பாலிவுட் நடிகையாவார். இவர் இயக்குனர் விஜய் இயக்கத்தில், உருவாகி ஜெயலலிதா பயோபிக்கில் நடித்து வருகிறார். இப்படம் தமிழ், இந்தி மற்றும் தெலுங்கு என மூன்று மொழிகளில் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இப்படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் வெளியாகும் இந்த படத்திற்கு ‘தலைவி’ என்றும், இந்தியில் உருவாகும் படத்துக்கு ‘ஜெயா’ இன்றும் பெயரிடப்பட்டுள்ளது. இதனையடுத்து, நடிகை கங்கானா இப்பெயர் குறித்த தனது கருத்தை இயக்குனர் விஜயிடம் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ஒரு திரைப்படம் மூன்று மொழிகளில் எடுக்கப்படும் போது, அவை மூன்றுக்கும் ஒரே வைப்பது தானே சிறந்தது. எனவே இந்தி வெர்சனுக்கும் ‘தலைவி’ என்கின்ற பெயரையே வைக்கலாம் என இயக்குனர் விஜயிடம் கூறியுள்ளார். இதனையடுத்து, இதுகுறித்து படக்குழுவினர் ஆலோசித்து வருகின்றனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.