கடந்த சில நாட்களாக தினகரனின் அமமுக கட்சியில் இருந்து முக்கிய நிர்வாகிகளான செந்தில் பாலாஜி ,தங்க தமிழ்செல்வன் உள்ளிட்டோர் மாற்று கட்சியில் இணைந்தனர்.மேலும் அமமுகவில் இருந்து விலகி இசக்கி சுப்பையாவும் அதிமுகவில் இணையவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் அமமுக பொதுச்செயலாளர் தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், அமமுகவில் இருந்து சென்றவர்கள் எல்லாம் தளபதிகள் இல்லை.அவர்கள் நிர்வாகிகள்தான் அதிமுகவுக்கு போக முடிவு எடுத்த பிறகுதான் அமமுகவில் இருந்து விலகியுள்ளார் இசக்கி சுப்பையா என்று தெரிவித்தார்.