நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக 40க்கு 40-ஐ ஜெயிக்கும்.! முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் உறுதி.!

2024 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக 40க்கு 40 தொகுதிகளிலும் வெற்றியடையும். அதற்கு பிறகு சட்டமன்றத் தேர்தலிலும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக வெற்றி பெரும் – முன்னாள் அதிமுக அமைச்சர் செங்கோட்டையன்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே  ஓர் தனியார் மண்டபத்தில் அதிமுக சார்பில் 2024 நாடாளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசனைகூட்டம் நடத்தப்பட்டுள்ளது. அந்த ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தலைமை தாங்கினார்.

அப்போது பேசிய அவர், ‘ஒவ்வொரு பூத்துகளிலும் ஆட்களை நியமிக்க வேண்டும். அதிமுக ஆட்சி காலத்தில் செயல்படுத்தப்பட்ட நலத்திட்டங்கள் குறித்து மக்களிடம் எடுத்து கூற வேண்டும். அம்மாவின் வழியில் சிறந்த ஆட்சியை எடப்பாடி பழனிச்சாமி நடத்தினார். தற்போது அவர் அதிமுக பொதுச் செயலாளராக இருக்கிறார். இதனால், அவர் பல்வேறு இடர்பாடுகளை சந்தித்து கொண்டு இருக்கிறார்.

வருகின்ற 2024 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக 40க்கு 40 தொகுதிகளிலும் வெற்றியடையும். அதற்கு பிறகு சட்டமன்றத் தேர்தலிலும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக வெற்றி பெரும் என முன்னாள் அதிமுக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment