தமிழகத்தில் குரூப்- 1 தேர்வு தொடங்கியது..!

தமிழகம் முழுவதும் 92 காலி பணியிடங்களுக்கான குரூப் 1 முதல் நிலை தேர்வு தொடங்கி .நடைபெற்று வருகிறது. 

தமிழகம் முழுவதும் 92 காலி பணியிடங்களுக்கான குரூப் 1 முதல் நிலை தேர்வு தொடங்கியது. துணை ஆட்சியர், டிஎஸ்பி உள்ளிட்ட பதவிகளுக்கான குரூப்-1 முதல் நிலை தேர்வை 3.22 லட்சம் பேர் எழுதுகின்றனர்.

தமிழகம் முழுவது, 1080 இடங்களில் பிற்பகல் 12:30 வரை இந்த தேர்வு நடைபெற உள்ளது. சென்னையில் மட்டும் 149 இடங்களில் குரூப்-1 முதல் நிலை தேர்வு நடைபெற்று வருகிறது. 200 மதிப்பெண்களுக்கு விடைகளை தேர்ந்தெடுத்து எழுதக்கூடிய கொள்கை குறி முறையில் இந்த தேர்வு நடைபெறுகிறது.

அக்டோபர் 30ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த இத்தேர்வு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், இன்று நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment