திமுக அரசை கண்டித்து பேரூராட்சிகளில் அதிமுகவினர் போராட்டம்.
திமுக அரசின் செயல்பாடுகளை கண்டித்து பேரூராட்சிகளில் அதிமுகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். சொத்துவரி, மின்கட்டணம் உயர்வு, பால் விலை உயர்வு என பல்வேறு மாவட்டங்களில் அதிமுகவினர் போராட்டம் நடைபெறுகிறது.
அதன்படி, கிருஷ்ணகிரி ஊத்தங்கரை பேரூராட்சி, ஈரோடு பவானிசாகர் பேரூராட்சி அலுவலங்கள் முன் அதிமுகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும், கரூர் குளித்தலை அருகே பணிக்கப்பட்டியிலும் திமுக அரசை கண்டித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே, மாண்டஸ் புயல் காரணமாக திமுக அரசைக் கண்டித்து அதிமுக சார்பில் பேரூராட்சிகளில் இன்று நடைபெறவிருந்த போராட்டங்களை மாண்டஸ் புயல் காரணமாக டிச.16-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளதாக அக்கட்சியின் தலைமைக் கழகம் அறிவித்திருந்த நிலையில், ஒரு சில இடங்களில் அதிமுகவினர் போராட்டம் நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.