பிஎஸ்என்எல் 4ஜி சில மாதங்களில் 5G -யாக மேம்படுத்தப்படும்..! அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்

பிஎஸ்என்எல் 4ஜி (BSNL-4G) சேவையானது 5 முதல் 7 மாதங்களில் 5G க்கு மேம்படுத்தப்படும் என்று அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார்.

அரசு நிறுவனமான பிஎஸ்என்எல் 4ஜி யானது 5 முதல் 7 முதல் மாதங்களில் 5G யாக மாற்றப்படும் என்று தொலைத்தொடர்பு அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். மேலும் இந்த சேவையானது நாடு முழுவதும் உள்ள சுமார் 1,35,000 மொபைல் டவர்களை விரிவுப்படுத்தப்படும் எனக் கூறினார்.

சிஐஐ நிகழ்வில் பேசிய அமைச்சர், உள்நாட்டு கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் வகையில் தொலைத்தொடர்பு தொழில்நுட்ப மேம்பாட்டு நிதியை ஆண்டுக்கு ரூ.500 கோடியில் இருந்து ரூ.4,000 கோடியாக உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.

பிஎஸ்என்எல், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்) நிறுவனத்திடம் 5ஜி சோதனைக்கான உபகரணங்களை வழங்குமாறு கேட்டுக் கொண்டுள்ளதாகவும், இதனால் டெலிகாம் நிறுவனம் 5ஜி சேவைகளுக்கான சோதனைகளைத் தொடங்கும் எனவும் கூறினார்.

author avatar
செந்தில்குமார்
நான் செந்தில்குமார், எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்கிறேன். செய்தி ஊடகத்தின் மீதான ஆர்வத்தினால், ஒரு வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். டெக்னாலஜி, க்ரைம், விளையாட்டு, தமிழ்நாடு முதல் உலக செய்திகள் வரை அனுபவம் உள்ளது.

Leave a Comment