உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக தனித்துப்போடியிட தயார்- அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக தனித்துப்போடியிட தயார் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
ராஜபாளையத்தில் செய்தியாளர்களிடம் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசினார்.அப்பொழுது அவர் பேசுகையில் , உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக தனித்துப்போடியிட தயார். அனைத்து கட்சிகளும் தனித்து போட்டியிட்டால், யாருக்கு பலம் என்பது தெரிந்துவிடும்.
ரஜினி-கமல் கூட்டணி என்பது சந்தர்ப்பவாத கூட்டணி.ரஜினி-கமல் ஒன்று சேர்ந்தாலும் அவர்களது ரசிகர்கள் ஒன்று சேரமாட்டார்கள். ரஜினி கமல் ஒரு முடிவு எடுத்தால் மக்கள் ஒரு முடிவு எடுப்பார்கள் என்று கூறினார் . அதிமுக தான் வெல்லும். இரட்டை இலை தான் ஜெயிக்கும் என்றும் தெரிவித்தார்.