மீண்டும் சூப்பர் ஸ்டார் படத்தில் முதல் முழுநீள பாடலை படவுள்ள எஸ்.பி.பாலசுப்ரமணியம்!

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் படம் என்றாலே அந்த படத்தின் முதல் பாடலை எஸ்.பி.பாலசுப்ரமணியம் தான் பாடுவார் என்பது வழக்கம். பாட்ஷா, அண்ணாமலை, முத்து, படையப்பா என பல படங்களில் பாடியுள்ளார். அந்த பாடல்கள் மெகா ஹிட்டாகியுள்ளார். இடையில் கபாலி, காலா போன்ற படங்களில் அவர் பாடவில்லை.
கடைசியாக வெளியான பேட்ட திரைபடத்தில் மரண மாஸ் பாடலை பாடியிருப்பார். ஆனால், அதில் சிறு பகுதியை மட்டுமே எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடியிருப்பார். மீதி பாடலை அனிருத் தான் பாடியிருப்பார். தற்போது, உருவாகிவரும் தர்பார் திரைப்படத்தின் முதல் பாடலை எஸ்.பி.பிதான் முழுக்க பாடியுள்ளாராம். இந்த பாடலுக்கு ‘சும்மா கிலி’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாம். இந்த படத்திற்கு அனிருத் தான் இசையமைத்து வருகிறார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிவருகிறார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.