இன்று திமுகவில் இணைகிறார் அதிமுக முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம்…!

தமிழக சட்டமன்ற தேர்தலில் பெருந்துறை தொகுதி எம்எல்ஏ தோப்பு வெங்கடாசலத்திற்கு நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட அதிமுக தலைமை வாய்ப்பு வழங்கவில்லை. அதற்கு பதிலாக ஜெயக்குமார் என்பவர் போட்டியிட்ட நிலையில், தோப்பு வெங்கடாசலம் பெருந்துறை தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடுவதாக அறிவித்து தேர்தலில் போட்டியிட்டார். ஆனால், அவர் 9 ஆயிரத்து 791 வாக்குகளை மட்டுமே பெற்று தோல்வியை தழுவினார்.

இந்நிலையில், இன்று காலை 10:30 மணியளவில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் மற்றும் முக்கிய நிர்வாகிகள் உள்பட 300 பேருடன் இணையவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.