மதுரையில் அதிமுக பிரச்சார பொதுக்கூட்டம்…! கால்கோள் நிகழ்ச்சி…! அமைச்சர்கள் பங்கேற்பு…!

மதுரையில், அதிமுக சார்பில் ஏப்.2ம் தேதி பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. அங்கு கால்கோள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

மதுரையில், அதிமுக சார்பில் ஏப்.2ம் தேதி பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இந்த பொது கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். இதையொட்டி, பாண்டி கோவில், சுற்றுவழி சாலையில் உள்ள அம்மா திடலில், ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

அந்த வகையில், அங்கு கால்கோள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த  நிகழ்வில்,அமைச்சர் செல்லூர் ராஜு, ஆர்.பி.உதயகுமார் மற்றும் அதிமுக, பாஜக முக்கிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். மதுரை மாவட்டத்தை சுற்றி உள்ள, 10 மாவட்டத்தில் உள்ள வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.