புத்திய யூஸ் பண்றாருனு நினைக்கிறீர்களா.??கம்பீரை கடுப்பேத்திய அப்ரிடி

இந்திய கிரிகெட் அணியின் முன்னாள் வீரர் ஆன கவுதம் காம்பீர் மற்றும் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் சாஹித் அப்ரிடி இருவருக்கும் அவ்வபோது வார்த்தை போர் காரசாரமாக நடைபெறும்.

இது சமூக வலைத்தளங்களில் விவாத பொருளாக மாறும் அளவிற்கு பெரியதாக இருக்கும்.அப்படி இருவரும் ஒருவருக்கு ஒருவர் சீண்டி கொள்வார்கள்.

Related image

மக்களவை தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்ட கவுதம் காம்பீர் வெற்றி பெற்றார். இந்நிலையில் அவர் புல்வாமா தாக்குதலில் பயங்கரவாதிகளால் இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.நாட்டையே உலுக்கியது.ஆகவே இந்திய அணி உலககோப்பை போட்டியில் பாகிஸ்தான் உடன் விளையாடுவதை தவிர்க்க வேண்டும் என்று தெரிவித்தார்.மேலும் அவர் தெரிவிக்கையில் அது இறுதி போட்டியாக இருந்தாலும் கூட இந்திய அணி தவிர்க்க வேண்டும் என்று தெரிவித்து இருந்தார்.

Image result for afridi gambhir

கவுதம் காம்பீர் தெரிவித்த இந்த கருத்துக்கு பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் அப்ரிடியிடம் செய்தியாளர்கள் கேட்ட போது பின்வருமாறு தெரிவித்தார்.

அவர் கூறுகையில் இது போல பேசுபவர்கள் தன்னுடைய புத்தியை பயன் படுத்துகிறார்கள் என்று நினைக்கிறீர்களா..? படித்தவர்கள் இப்படிபேசுவார்களா..? என்று கவுதம் காம்பீரை கடுப்பேத்தி உள்ளார்.

author avatar
kavitha

Leave a Comment