தேர்தல் நடத்தை விதிகள் தளர்த்தப்பட்டது -தேர்தல் ஆணையம் அறிவிப்பு

இந்தியாவில் மக்களவை தேர்தல் 7 கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற்றது.7 கட்டமாக நடைபெற்ற தேர்தலின் முடிவுகள் கடந்த 23 -ஆம் தேதி வெளியிடப்பட்டது.இதனால் கடந்த மார்ச் 10 ஆம் தேதி முதல் தேர்தல் நடந்தை விதிகள் அமலில் இருந்தது.

இந்நிலையில் தேர்தல் ஆணையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அதில், நாடு முழுவதும் மக்களவை தேர்தல் முடிந்ததை அடுத்து தேர்தல் நடத்தை விதிகள் தளர்த்தப்பட்டன. 4 மாநில பேரவை தேர்தல், இடைத்தேர்தல் நடந்த மாநிலங்களிலும் தேர்தல் நடத்தை விதிகள் தளர்வு செய்யப்பட்டுள்ளது என்று தேர்தல் ஆணையம்  தெரிவித்துள்ளது.

Leave a Comment