ஒரு ஓட்டு வித்தியாசத்தில் கேரளாவில் முதன்முறையாக கிராம பஞ்சாயத்தை கைப்பற்றிய அதிமுக!

கேரளா மாநிலதில் உள்ள இடுக்கி பகுதி தமிழக கேரளா எல்லையாக இருப்பதால் அங்கு, தமிழர்கள் அதிகம் ஆதலால் அங்கு நடைபெறும் கிராம பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட்ட காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி சார்பாக அதிமுக போட்டியிட்டது. இந்த காங்கிரஸ் கூட்டணியை எதிர்த்து இடது சாரிகள் கூட்டணி போட்டியிட்டது.

இந்த கிராம பஞ்சாயத்து தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியின் சார்பாக அதிமுக கட்சி வேட்பாளர் எஸ்.ப்ரவீனா போட்டியிட்டார். இந்த தேர்தலில் இடது சாரி கூட்டணி வேட்பாளரை விட 1 வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்று, கேரளாவில் தனது முதல் கிராம பஞ்சாயத்தை காங்கிரஸ் உதவியோடு கைப்பற்றியுள்ளது அதிமுக.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.