10 மணிக்கு மேல் அத பண்ணவே பிடிக்காது! நடிகை டாப்ஸி ஓபன் டாக்!

Taapsee Pannu தமிழ் சினிமாவில் தனுஷிற்கு ஜோடியாக  ஆடுகளம் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை டாப்ஸி. இவர் தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாகும் திரைப்படங்களும் நடித்து முன்னணி நடிகையாக இருக்கிறார். இவர் தனக்கு மனதிற்கு தோன்றும் விஷயங்களை வெளிப்படையாகவே பேசிவிடுவார் என்பது பலருக்கும் தெரியும்.

READ MORE – எம்மாடி திருமணம் மட்டுமே வேண்டவே வேண்டாம்! அலறும் நடிகை ஆண்ட்ரியா!

அந்த வகையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட நடிகை டாப்ஸி தனக்கு 10 மணிக்கு மேல் பார்ட்டிகளில் கலந்து கொள்வது பிடிக்கவே பிடிக்காது என்ற கூறியுள்ளார். இது குறித்து பேசிய டாப்ஸி ” பெரிய நடிகர்களுக்கு நான் மெசேஜ் அனுப்புவதாக சிலர் சொன்னார்கள். அதன்பிறகுதான் அவர்கள் என்னை விழாவுக்கு அழைப்பார்கள் என்று கேள்விப்பட்டேன். ஆனால், அது கொஞ்சம் கூட உண்மை இல்லை. எனக்கு இரவு நேரங்களில் வெளியே செல்ல பிடிக்காது.

READ MORE – ஒரு வழியா குறைச்சிட்டாங்க போல! பழைய லுக்கில் அனுஷ்கா! குவிய போகும் பட வாய்ப்புகள்?

எனக்கு புகைபிடிக்கும் பழக்கமோ, போதைப்பொருள் உட்கொள்ளும் பழக்கமோ இல்லை. பார்ட்டிகளுக்கு போனால் என்ன செய்வது என்று தெரியவில்லை. தெரியாதவர்களுடன் பார்ட்டி வைக்கும் எண்ணம் சத்யமாகவே  எனக்கு இல்லை. ஏனென்றால்  அவர்களிடம் என்ன பேசுவது என்று தெரியவில்லை. பார்ட்டிகளுக்கு வரவில்லை என்றால் வேலை செய்யவில்லை என்று அர்த்தம் இல்லை. இப்படி பார்ட்டி செய்வதால் பாலிவுட்டில் பிரபலமாவது மிகவும் எளிதானது.

READ MORE – இப்போ டைம் இல்ல! தனுஷுக்கு அல்வா கொடுத்த மஞ்சும்மல் பாய்ஸ் இயக்குனர்!

அதுமட்டுமின்றி. இரவு 10 மணிக்குப் பிறகு பார்ட்டியில் ஈடுபடுவது சுத்தமாக பிடிக்கவே பிடிக்காது.  சொந்த கஷ்டத்தில் தான் இவ்வளவு தூரம் வந்திருக்கிறேன்” எனவும் நடிகை டாப்ஸி தெரிவித்துள்ளார். மேலும் நடிகை டாப்ஸி மத்தியாஸ் போ  என்பவரை காதலித்து வருகிறார். விரைவில் அவரை திருமணம் செய்துகொள்வார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.

Leave a Comment