இப்போ டைம் இல்ல! தனுஷுக்கு அல்வா கொடுத்த மஞ்சும்மல் பாய்ஸ் இயக்குனர்!

Manjummel Boys மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் கடந்த பிப்ரவரி 22-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான நிலையில், இன்னும் இந்த திரைப்படத்தின் தாக்கம் நிற்கவில்லை என்றே கூறலாம். அந்த அளவிற்கு விமர்சன ரீதியாகவும் சரி அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. வசூல் ரீதியாக உலகம் முழுவதும் இந்த திரைப்படம் 150 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளது. இன்னும் பல திரையரங்குகளில் வெற்றிநடைபோட்டு கொண்டு இருக்கிறது.

READ MORE – கமல் சாரை பார்த்தது கனவு மாதிரி இருக்கு! ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ இயக்குனர் எமோஷனல்!

இந்நிலையில், ஏற்கனவே ‘ மஞ்சும்மல் பாய்ஸ் ‘ படத்தை பார்த்துவிட்டு நடிகர் தனுஷ் இயக்குனர் சிதம்பரம் எஸ். பொதுவாலை நேரில் அழைத்து பாராட்டி இருந்தார். அத்துடன் தனக்கு ஒரு கதை கூற சொல்லி அவருடைய இயக்கத்தில் ஒரு படத்திலும் நடிக்க கமிட் ஆனதாகவும், அந்த திரைப்படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவிருந்ததாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தது.

READ MORE – கமல் தவறவிட்ட வெற்றி… அதே இடத்தில் தட்டிய தூக்கிய மல்லு சேட்டன்ஸ்.!

அதனை தொடர்ந்து தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால், தனுஷை வைத்து சிதம்பரம் எஸ். பொதுவால் இயக்கவிருந்த படத்தில் இருந்து சிதம்பரம் எஸ். பொதுவால் பின் வாங்கி இருக்கிறாராம். ஏனென்றால், அவர் முதலில் தனுஷிற்கு கூறிய கதை வேறு கதையாம் ஆனால், தனுஷ் யாரடி நீ மோகினி படத்தின் கதையை போல ஒரு கதை இருந்தால் சொல்லுங்கள் என்று கூறிவிட்டாராம்.

READ MORE – இந்த வருஷம் தமிழ் சினிமா என்னோட கண்ட்ரோல்! முரட்டு சம்பவத்திற்கு தயாரான சிவகார்த்திகேயன்!

ஆனால், சிதம்பரம் எஸ். பொதுவாலிடம் தனுஷ் சொன்னது  போல கதை இல்லை என்பதால் இப்போது என்னிடம் கதை இல்லை. அப்படி வேண்டும் என்றால் நான் மலையாளத்தில் மீண்டும் மஞ்சும்மல் பாய்ஸ் படத்தை போல ஒரு சிறிய பட்ஜெட் படத்தை எடுத்துவிட்டு அதன்பிறகு வருகிறேன். அதற்குள் நீங்கள் சொல்லுவது போல கதை கிடைத்துவிட்டால் நாம் இணைந்து படம் செய்யலாம் என்று கூறிவிட்டாராம்.

அது மட்டுமின்றி இப்போது தனுஷ் கூறியதை போல ஒரு கதையை நேரம் எடுத்து எழுத முடியாது டைம் இல்லை என்று கூறிவிட்டாராம். ஏனென்றால் சிதம்பரம் எஸ். பொதுவாலுக்கு கொஞ்சம் கொஞ்சம் தான் தமிழ் வருமாம் எனவே கொஞ்சம் நேரம் எடுத்து கொண்டு ஒரு படத்திற்கு பிறகு தான் தனுஷை வைத்து இயக்குவதற்கான படத்தின் கதையை எழுதுவார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.

Leave a Comment