நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவிற்கு எதிராக வலுவான கூட்டணி அமையும் …!கனிமொழி

நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவிற்கு எதிராக வலுவான கூட்டணி அமையும்  என்று திமுக எம்.பி  கனிமொழி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக திமுக எம்.பி  கனிமொழி கூறுகையில், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் கஜா புயல் நிவாரணம் தொடர்பான விவகாரத்தை திமுக எழுப்பும், போதிய தொகை ஒதுக்கப்படவில்லை என்பதை நிச்சயம் பதிவுசெய்யும் . நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவிற்கு எதிராக வலுவான கூட்டணி அமையும், அதற்கான முயற்சி நடைபெற்று வருகிறது.அனைத்துக்கட்சிகளும் ஒருமித்த குரலில் வலியுறுத்தினால் 7 பேர் விடுவிக்கப்படுவார்கள் எனில், அதற்கு திமுக துணை நிற்கும் என்றும் திமுக எம்.பி  கனிமொழி தெரிவித்துள்ளார்.

Leave a Comment