பொதுத்தேர்வு,பாலியல் புகார்கள்:இன்று முதன்மைக் கல்வி அலுவலர்கள் ஆலோசனைக் கூட்டம்!

சென்னை:டிபிஐ அலுவலகத்தில் இன்று மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது.

சென்னையில் உள்ள பள்ளிக்கல்வித்துறை (டிபிஐ) அலுவலகத்தில் பள்ளிக்கல்வி ஆணையர் நந்தகுமார் தலைமையில் இன்று அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பள்ளி இடைநிற்றல்,பொதுத்தேர்வு, பாலியல் புகார்களை தடுப்பது உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.