ரஃபேல் போர் விமானம் குறித்து..! விவாதிக்க பிரதமர் மோடிக்கு ராகுல்காந்தி சவால்..!!

ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக தம்முடன் நேரடியாக விவாதிக்க தயாரா என்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பிரதமர் மோடிக்கு சவால் விடுத்துள்ளார்.
அதிநவீன 36 ரஃபேல் போர் விமானங்களை 58 ஆயிரம் கோடி ரூபாய்க்கு வாங்குவதற்கு பிரான்ஸ் அரசுடன் இந்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. இதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக ராகுல் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார்.
கர்நாடக மாநிலத்தில் பிடர் (( bidar ))என்ற இடத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல்காந்தி, ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பான விவாதத்திற்கு வருமாறு தாம் பிரதமர் மோடிக்கு சவால் விடுப்பதாகவும், ஆனால் தம்முடைய சவாலை பிரதமர் ஏற்க மாட்டார் என்றும் கூறினார்.
DINASUVADU

author avatar
kavitha

Leave a Comment