#BREAKING: அதிமுக பொதுக்குழு வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!

அதிமுக பொதுக்குழுவிற்கு தடை கோரிய ஓ.பன்னீர்செல்வம் மற்றும் வைரமுத்து ஆகியோரின் மனு.

அதிமுக பொதுக்குழுவுக்கு எதிரான ஓ.பன்னீர்செல்வம் வழக்கை நாளை மறுநாள் ஒத்திவைத்து சென்னை உயர் நீதிமன்றம். அதன்படி அதிமுக பொதுக்குழுவுக்கு தடைக்கோரி ஓ பி எஸ் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை புதன்கிழமை 2.15 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந்த வழக்கில் வாதங்களை முன்வைக்க டெல்லியில் இருந்து மூத்த வழக்கறிஞர் குரு கிருஷ்ண குமார் வரவுள்ளதால் ஒத்திவைக்குமாறு ஓபிஎஸ் தரப்பு கோரிக்கை வைத்தது. ஓபிஎஸ் தரப்பு கோரிக்கையை ஏற்று, அதிமுக பொதுக்குழு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார் உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயசந்திரன்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment