அரசியல் பற்றி விவாதித்தோம்.. ஆனால் அதனை செய்ய மாட்டேன்.! ஆளுநர் சந்திப்பு.. ரஜினிகாந்த் பேட்டி.!

தமிழக ஆளுநரை நடிகர் ரஜினிகாந்த் இன்று  சந்தித்தார். அதன் பின்னர் அந்த சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் பகிர்ந்து கொண்டார். 

இன்று காலை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேரில் சென்று சந்தித்தார். இந்த சந்திப்பு சென்னை , கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது.

இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என கூறப்பட்டது. இந்த சந்திப்பு முடிந்ததும், நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பத்திரிகையாளர்கள் பல்வேறு கேள்விகளை கேட்டனர்.

அதாவது உள்ளே அரசியல் பற்றி விவத்தீர்களா என கேட்டதற்கு விவாதித்தோம். இப்போது எதுவும் கூற முடியாது எனரஜினி கூறினார். அதேபோல, அரசியலுக்கு வருவீர்களா என கேட்டதற்கு , இல்லை நான் அரசியலுக்கு வர மாட்டேன் என தெரிவித்தார்.  பால் பொருட்கள் ஜி.எஸ்.டி பற்றி கேட்டதற்கு நோ கமெண்ட்ஸ் என கருத்து கூற மறுத்துவிட்டார்.

இறுதியாக , ஜெயிலர் படம் எப்போது தொடங்கும் என கேட்டபோது, இம்மாதம் 15 அல்லது 22ஆம் தேதி தொடங்கும் என தெரிவித்து விட்டு சென்றுவிட்ட்டார் நடிகர் ரஜினிகாந்த்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment