பிரதமர் மோடியை ராகுல்காந்தி அவதூறாக விமர்சித்த வழக்கு ! நாளை தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்

பிரதமர் மோடியை ராகுல்காந்தி அவதூறாக விமர்சித்ததாக தொடர்ந்த வழக்கில் நாளை தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்.
குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத்தில் நடைபெற்ற பிரச்சாரம் ஒன்றில் ரபேல் விவகாரத்தில் காவலாளியே திருடன் என்று பிரதமர் மோடியை விமர்ச்சித்தார் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி.இதற்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.இதனை தொடர்ந்து பாஜக எம்.பி. மீனாட்சி லேகி உச்சநீதிமன்றத்தில்  நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கு தொடர்பான விசாரணையில் நாளை உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது .