ஒன்றாம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான தமிழக அரசின் புதிய வரைவு பாடத்திட்டத்தை 17 நாடுகள் வரவேற்றுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரசின் புதிய பாடத்திட்டம் சிபிஎஸசி பாடத்திட்டத்தை விட தரமாக உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் கூறுகையில், “இப்பாடத்திட்டம் இந்தியாவையே திரும்பி பார்க்கும் அளவுக்கு உள்ளது” என்று கூறினார். பள்ளி வாகனங்களை வேகமாக இயக்கக கூடாது என்று உத்தரவிட்டுள்ளதாகவும், 11ம் வகுப்பை தேர்வை பொது தேர்வாக மாற்றி உள்ளதற்கும் அனைத்துத்தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.