சத்தீஸ்கரில் CBI_க்கு தடை…!!

சிபிஐ, ரிசர்வ் வங்கி உள்ளிட்ட தன்னாட்சி அமைப்புகளில் மத்திய அரசு தலையிட்டு கட்டுப்படுத்துவதாக தொடர்ந்து எதிர்க்கட்சிகள் குற்றம் சட்டி வருகின்றனர். சிபிஐ மூலம் எதிர்க்கட்சியினரை மிரட்டும் பா.ஜ.க  அரசின் நடவடிக்கை இருந்து வருகின்றது என்று காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் விமர்சனம் செய்தனர். இதையடுத்து சத்தீஸ்கர் மாநிலத்தில் சிபிஐ அமைப்புக்கு அளிக்கப்பட்டிருந்த பொது அனுமதியை சத்தீஸ்கர் மாநில காங்கிரஸ் தலைமையிலான அரசு திரும்பப் பெற்றுள்ளது. ஏற்கனவே ஆந்திரா, மேற்குவங்க மாநில அரசுகள் சிபிஐ அமைப்புக்கான பொது அனுமதியை திரும்பப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment