ஒப்புதல் கிடைத்ததும் 6 லட்சம் முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி – ராதாகிருஷ்ணன்

தமிழகத்தில் நாளை 11 இடங்களில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெறுகிறது என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் தடுப்பூசிக்கு ஒப்புதல் கிடைத்தவுடன் தமிழகம் முழுவதும் 6 லட்சம் முன்கள பணியாளர்களுக்கு கொரோனோ தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் இதுவரை ஒருவருக்கு மட்டுமே உருமாறிய கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. உருமாறிய கொரோனோவால் நோய் பரவல் மற்றும் இறப்பு விகிதம் மாறுபடவில்லை. மேலும், தமிழகத்தில் நாளை 11 இடங்களில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெறுகிறது என்றும் தெரிவித்துள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்