#INDvENG: 4-வது டெஸ்ட்… டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு..!

இன்று இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி ராஞ்சியில் உள்ள ஜேஎஸ்சிஏ சர்வதேச மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது. இந்த போட்டியில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ராவிற்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு பதிலாக அணியில் ஆகாஷ் தீப் இணைந்துள்ளார்.

ஆகாஷ் தீப்  இன்றை டெஸ்ட் போட்டி மூலம் சர்வேதேச டெஸ்ட் போட்டியில் முதல் முறையாக விளையாட உள்ளார்.

READ MORE- இன்று 4-வது டெஸ்ட்.. இந்தியா ஹாட்ரிக் வெற்றியை ருசிக்குமா..? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!

இந்திய அணி வீரர்கள்:

யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரோஹித் சர்மா(கேப்டன்), சுப்மான் கில், ரஜத் படிதார், சர்ஃபராஸ் கான், ரவீந்திர ஜடேஜா, துருவ் ஜூரல்(விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஷ்வின், குல்தீப் யாதவ், ஆகாஷ் தீப், முகமது சிராஜ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இங்கிலாந்து அணி வீரர்கள்:

சாக் க்ராலி, பென் டக்கெட், ஒல்லி போப், ஜோ ரூட், ஜானி பேர்ஸ்டோவ், பென் ஸ்டோக்ஸ்(கேப்டன்), பென் ஃபோக்ஸ்(விக்கெட் கீப்பர்), டாம் ஹார்ட்லி, ஒல்லி ராபின்சன், சோயிப் பஷீர், ஜேம்ஸ் ஆண்டர்சன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

 

author avatar
murugan

Leave a Comment