பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இலங்கை சிறையில் இருந்து தமிழக மீனவர்கள் 4 பேர் விடுவிப்பு?

நெடுந்தீவு அருகே இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 4 பேர், பொங்கல் பண்டிகையையொட்டி விடுவிக்கப்பட இருப்பதாக தெரியவந்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டிணத்தைச் சேர்ந்த 4 மீனவர்கள் கடந்த சனிக்கிழமை மீன்பிடிக்க சென்றனர். நெடுந்தீவு அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக அவர்களை, இலங்கை கடற்படை கைது செய்தது. கைதானவர்களை 3 நாட்கள் காவலில் அடைக்க இலங்கை ஊர்க்காவல் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனிடையே பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் 10 ஆம் தேதிக்கு பிறகு, நான்கு மீனவர்களும் விடுதலையாக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

 

 

 

 

 

 

 

 

author avatar
Dinasuvadu desk

Leave a Comment