தினகரனுக்கு ஆதரவு அளிக்கும் 3 அதிமுக எம்எல்ஏக்கள்…!விளக்கம் வராவிட்டால் அடுத்தக்கட்ட முடிவு ..!துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அதிரடி

உள்ளாட்சித் தேர்தல் வழக்கு முடிந்த பின்பு தேர்தல் நடைபெறும் என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
Image result for தினகரன்
இது தொடர்பாக  துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறுகையில் ,உள்ளாட்சித் தேர்தல் வழக்கு முடிந்த பின்பு தேர்தல் நடைபெறும்.உள்ளாட்சித் தேர்தலை விரைவில் நடத்த வேண்டும் என்பதே எங்களின் கோரிக்கை ஆகும் .3 எம்எல்ஏக்களின் நிலை குறித்து சட்டப்பேரவை தலைவர் விளக்கம் கேட்டுள்ளார்.விளக்கம் வராவிட்டால் அடுத்தக்கட்ட முடிவு குறித்து ஆலோசிக்கப்படும் என்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
டிடிவி தினகரன் ஆதரவு 3 எம்.எல்.ஏக்கள் ரத்தினசபாபதி, கலைச்செல்வன், பிரபு ஆகியோரிடம் விளக்கம் கேட்க அரசு கொறடா ராஜேந்திரன் சபாநாயகருக்கு பரிந்துரை செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment