2 தொகுதி இடைத்தேர்தல் ! உண்மைக்கு கிடைத்த வெற்றி-முதலமைச்சர் பழனிசாமி

தமிழகத்தில் விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் முதலமைச்சர் பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், வாக்களித்த மக்களுக்கு மனமார்ந்த நன்றி. கூட்டணி கட்சி தலைவர்களுக்கு நன்றி.தொண்டர்களின் உழைப்பால் பெற்ற வெற்றி இது .
2 தொகுதிகளிலும் அதிமுக முன்னிலையில் உள்ளது, இது உண்மைக்கு கிடைத்த வெற்றி.2021 தேர்தல் வெற்றிக்கான முன்னோட்டம் இது என்று தெரிவித்துள்ளார்.