காட்டுப்பன்றி கடித்து இரண்டு விவசாயிகள் படுகாயம்..!

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள திருச்சுழி நரிக்குடி கிராமம் மற்றும் அதை சுற்றியுள்ள  கிராமங்களில் உள்ளவர்கள் விவசாயத்தை தொழிலாக செய்து வருகின்றனர்.
தற்போது பெய்து வரும் மழையால் விவசாய நல்ல நடந்து வந்தாலும் காட்டு பன்றி பயிர்களை சேதப்படுத்துவதும் , தங்களையும் தாக்குவதாகவும் விவசாயிகள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நரிக்குடி நாலூரை  சார்ந்த முத்துப்பாண்டி 25 , ராஜ்குமார் 21 ஆகியோர் தங்களின்  விவசாய நிலத்திற்கு  சென்றுள்ளனர்.
அப்போது அங்கு புதரில் இருந்த காட்டுப் பன்றி ஒன்று இருவர் மீது பாய்ந்து தாக்கியது. இதில் முத்துப்பாண்டி கால்களை காட்டு பன்றி கடித்து குதறியது. முத்துப்பாண்டியை கடிப்பதை பார்த்த ராஜ்குமார் காட்டுப்பன்றி விரட்ட முயற்சி செய்தார். அதனால் ராஜ்குமார் விரலையும் கடித்துள்ளது.
இருவரின் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து காட்டுப்பன்றியை விரட்டியடித்தனர். அவர்களை மீட்டு அருகிலிருந்த அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

author avatar
murugan