14417 மாணவ, மாணவிகள் புகார் அளித்த 24 மணி நேரத்தில் 'ஆக்க்ஷன்'..! அமைச்சர் செங்கோட்டையன்..!!

கல்வி நிலையங்களில் ஏதேனும் இடர்பாடுகள் இருந்தால் மாணவ, மாணவிகள் 14417 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம் என்று பள்ளிகல்வித்துறை அமைச்சர் அறிவித்தார் இந்த நிலையில் 14417 என்ற எண்ணில் வரும் மாணவ,மாணவியரின் புகார் மீது 24 மணிநேரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று  அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
மேலும் அடுத்த ஆண்டு முதல் +2 மாணவர்களுக்கு 12 புதிய திறன் படிப்புகள் கற்றுத்தரும் வகையில் பாடத்திட்டம் உருவாக்கப்படும் மற்றும் 3,700 ஆசிரியர்களை கொண்டு மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கான பயிற்சி வழங்கப்பட உள்ளது என்று கூறினார்.
DINASUVADU

author avatar
kavitha

Leave a Comment