வட மாநிலங்களுக்கு இடியுடன் கூடிய கனமழைக்கு எச்சரிக்கை!இந்திய வானிலை ஆய்வு மையம்

இந்திய வானிலை ஆய்வு மையம்,ஜம்மு- காஷ்மீர், இமாச்சல பிரதேசம் உள்ளிட்ட 18 மாநிலங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் இடியுடன் கூடிய கனமழையும், சூறைக்காற்றும் வீசும் என்று கூறியுள்ளது.

அந்த மையத்தின் அறிக்கையை மேற்கொள் காட்டி மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் விடுத்துள்ள செய்திக் குறிப்பில், உத்தரபிரதேசம், மேற்கு வங்கம், சிக்கிம், உள்ளிட்ட 18 மாநிலங்களில் சூறைக்காற்று வீசுமென கூறப்பட்டுள்ளது.

அந்த மாநிலங்களின் பல ஊர்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேற்கு வங்கம், ஒடிசா மாநில கடலில் ராட்சத அலைகள் எழும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment