பிரபல நடிகரின் மகன் திருமணம் பாலியல் வழக்கால் நிறுத்திவைப்பு!

நீலகிரி இன்று நடைபெறவிருந்த இந்தி நடிகர் மிதுன்சக்கரவர்த்தி மகனின் திருமணம் நிறுத்தப்பட்டுள்ளது.

உதகையில் இன்று நடைபெறவிருந்த  இந்தி நடிகர் மிதுன்சக்கரவர்த்தி மகனின் திருமணம் நிறுத்தப்பட்டுள்ளது.

முன்னதாக  பாலிவுட் நடிகர் மிதுன் சக்ரவர்த்தியின் மகன் பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் வழக்கு பதிவு செய்ய டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

அவர் அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக பாலியல் துஷ்பிரயோகம் செய்தார் என்று வழக்கு ஒன்றை  அக்சய் மீது காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

இது தொடர்பாக அந்த பெண்  மனு ஒன்றை தாக்கல் செய்தார். மகா அக்சய் திருமணம் செய்வதாக கூறியதாகவும், பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகவும் வழக்கு பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment