பிரதமர் மோடியின் ஆட்சியில் ஜனநாயகம் கண்ணீர் விடுகிறது – ராகுல் டுவீட்

பிரதமர் மோடியின் ஆட்சியில் ஜனநாயகம் கண்ணீர் வடிப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வேதனை தெரிவித்துள்ளார்.

‘கிரைம் த்ரில்லர்’ கதையின் புதிய பகுதியின் பெயர் ‘டெல்லியைத் தாண்டிய காவல்கார திருடன்’ என தனது டுவிட்டரில் ராகுல் தெரிவித்துள்ளார். இந்த புதிய கதையில் மத்திய அமைச்சர், தேசியப் பாதுகாப்பு அதிகாரி, சட்டத்துறை செயலாளர், அமைச்சரவைச் செயலாளர் ஆகியோருக்கு எதிராக கவலை கொள்ளக்கூடிய குற்றச்சாட்டுகளை சிபிஐ டிஐஜி எம்.கே.சின்ஹா கூறுவதாக குறிப்பிட்டுள்ளார்.

மற்றொரு புறம், குஜராத்தில் இருக்கும் அவரது கூட்டாளி, கோடிக்கணக்கில் வசூல் செய்வதில் ஆர்வமாக இருப்பதாக அவர் கூறியுள்ளார். அதிகாரிகள் சோர்ந்துவிட்டார்கள், நம்பிக்கை உடைந்துவிட்டது ஜனநாயகம் கண்ணீர் விடுவதாகவும் ராகுல்காந்தி வேதனை தெரிவித்துள்ளார்.

dinasuvadu.com

author avatar
Dinasuvadu desk

Leave a Comment