பெட்ரோல் மற்றும் டீசலின் விலை கடுமையாக உயர்த்தப்பட்டிருக்கிறது. அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக நாளை (10.09.2018) நாடு முழுவதும் முழு அடைப்புப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருக்கிறது அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைமை. அதையொட்டி, புதுச்சேரியிலும் முழு அடைப்பு போராட்டத்தை அறிவித்திருக்கிறது ஆளும் கட்சியான காங்கிரஸ். சிறப்பான முறையில் போராட்டத்தை நடத்துவது தொடர்பான நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மாநிலத் தலைவர் நமச்சிவாயம் தலைமையில், கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
அப்போது, “அரசுப் பேருந்துகளோ அல்லது தனியார் பேருந்துகளோ நாளைக்கு எது ஓடினாலும் அதை உடைப்போம். ஆனால் எங்கள் மீது எந்த வழக்கும் போடக் கூடாது” என்று நிர்வாகிகள் கூச்சலிட்டனர். அதனால் சற்றுநேரம் அங்கு பரபரப்பு சூழல் நிலவியது.
கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் நாராயணசாமி “பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து அகில இந்திய காங்கிரஸ் கட்சி அறிவித்திருப்பது இதுவே முதல் முறை. அதனால் புதுச்சேரியைச் சேர்ந்த வியாபாரிகளும் பொதுமக்களும் சிரமம் பாராமல் இதற்கு ஒத்துழைப்பு தரவேண்டும்” என்றார். இந்த போராட்டத்திற்கு தி.மு.க, விடுதலைச் சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகளும் பல்வேறு தொழிற்சங்கங்களும் ஆதரவு தெரிவித்திருப்பதால் நாளை ஆட்டோ, பேருந்துகள் இயங்குவதற்கான வாய்ப்புகள் குறைவு. ஆட்டோ, பேருந்துகள் இயங்காது என்பதால் பெரும்பான தனியார் பள்ளிகளும் விடுமுறை அளிப்பது குறித்து ஆலோசனை நடத்தி வருகின்றன.
DINASUVADU
NASA : நாசா விண்வெளி ஆய்வு மையமும், போயிங் நிறுவனமும் இணைந்து பல விண்வெளி ஆராய்ச்சிகள் செய்து வரும் நிலையில் அவற்றின் கடைசி கட்ட சோதனைக்காக கனேடிய விண்வெளி…
Arvinder Singh Lovely : டெல்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அர்விந்தர் சிங் லவ்லி இன்று பாஜகவில் இணைந்தார். நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் தற்போது டெல்லி அரசியலில்…
தனியா விதைகள் -கொத்தமல்லி விதைகளின் கொத்தான நன்மைகளை பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம். உலகில் மிகப் பழமையான நறுமணமூட்டிகளில் கொத்தமல்லி விதைகளும் ஒன்று. கிட்டத்தட்ட 9 ஆயிரம்…
Mumbai Indians : மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் 12 வருடங்களாக கொல்கத்தா அணியுடன் தோல்வியடையாத மும்பை அணி நேற்றைய போட்டியில் தோல்வி அடைந்தது பல வருடம் ரோஹித்…
Prajwal Revanna : பாலியல் புகாரில் சிக்கி வெளிநாடு தப்பி சென்ற பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக புளு கார்னர் நோட்டீஸ் உத்தரவு பிறப்பிக்க கர்நாடக அரசு கடிதம்…
Ajith Kumar : அஜித்குமார் தனக்கு பெரிய அட்வைஸ் ஒன்றை செய்ததாக நிவின் பாலி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர்…