தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூரில் விநாயகர் கத்தரிக்காயல் பரபரப்பு

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தாலுகாவிற்கு உட்பட்ட ஆத்தூரில் பிரபல மாதவன் காய்கறிகடையில் இன்று விற்பனைக்கு வைத்திருந்த காய்கறிகளில் விநாயகர் தோற்றம் கொண்ட கத்தரிக்காய் ஒன்று அதிசயமாக காணப்பட்டது. விநாயகரின் தோற்றம் இயற்கையாக அமைந்ததை வாடிக்கையாளர்கள் வியப்பாக பார்த்து செல்கின்றனர்.அதிசய விநாயகரை பொதுமக்கள் பார்வைக்கு வைத்திருப்பதாக மாதவன் கூறியுள்ளார்.ஏற்கனவே இவர் விநாயகர் பக்தர் என்பதும் குறிப்பிடத்தக்கது .

author avatar
Dinasuvadu desk

Leave a Comment